×

தூத்துக்குடியில் ஆடு திருடியவர் கைது

தூத்துக்குடி, பிப். 29: அய்யனடைப்பு பகுதியில் ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அய்யனடைப்பு, கணபதி நகரை சேர்ந்த அண்ணாதுரை மகன் பொன்ராஜ்(எ)கார்த்திகேயன்(32). இவர், கடந்த 26ம் தேதி இரவில் வீட்டின் முன்புள்ள ஆட்டுக் கொட்டகையில் ஆடுகளை அடைத்துள்ளார். மறுநாள் காலையில் பார்க்கும்போது ஒரு ஆட்டை காணவில்லை. இதுகுறித்து பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் எஸ்ஐ ஆரோக்கியஜென்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இதில் பூபாண்டியாபுரம் வஉசி நகரை சேர்ந்த இசக்கி மகன் மூர்த்தி(24) என்பவர் ஆடு திருடியது தெரிய வந்தது. இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மூர்த்தி மீது ஏற்கனவே இட்டமொழி, குளத்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடியில் ஆடு திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Ayyanadipu ,Ponraj (A) Karthikeyan ,Annadurai ,Tuticorin Ayyanadaippu, Ganapathi town ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...