×

பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்யக்கோரி போராட்டம்: 33 ஆசிரியருக்கு மெமோ

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக, பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேல் மீது 8 முறைகேடு புகார்கள் உறுதியானதால் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள தங்கவேலை சஸ்பெண்ட் செய்யுமாறு, துணைவேந்தர் ெஜகநாதனுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்தி கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

இந்நிலையில், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி நேற்று காலை பல்கலைக்கழகம் முன்பு அதன் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு, பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி, 33 பேராசிரியர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதனிடையே, நேற்று மாலையும் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய கோரி, மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

The post பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்யக்கோரி போராட்டம்: 33 ஆசிரியருக்கு மெமோ appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Omalur ,Higher Education Secretary ,Karti ,Vice-Chancellor ,Yejaganathan ,Thangavel ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...