×

பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவிக்கு ஜாமீன்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி, அவரது இரண்டு மகள்கள் எம்பி மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவிக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Rabri Devi ,NEW DELHI ,The Enforcement Directorate ,Rashtriya Janata Dal ,Lalu Prasad Yadav ,
× RELATED லாலு மகள் ரோகினி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்