×

மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்: தூத்துக்குடியில் பிரதமர் மோடி உரை

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று 36 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும். தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். தூத்துக்குடியில் ரூ.4,000 கோடியில் சாலைகளை மேம்படுத்த 4 திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ரயில்கள், சாலை வழியே பயணிக்கும் மக்களுக்காக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 75 கலங்கரை விளக்கங்கள், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை
நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறேன்.

சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சியடையும். மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு புதிய சகாப்தத்தை படைக்க உள்ளது. தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாகவிருக்கிறது. கசப்பான உண்மையை சொல்கிறேன்; முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அவனத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்த நலத்திட்டங்கள் இப்போது நிறைவேறுகின்றன.மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்.தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகள், ஒன்றிய அரசின் திட்டங்களை பிரசுரித்து வெளியிடாது. ஒன்றிய அரசின் திட்டங்களை பத்திரிகைகள் பிரசுரித்து வெளியிடுவதற்கு இங்குள்ள அரசு விடாது. ,”இவ்வாறு பேசினார்.

The post மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்: தூத்துக்குடியில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : Modi ,Thoothukudi ,U. ,C. ,PM Modi ,Ceremony ,Tuticorin ,
× RELATED பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்...