- என்.எஸ்.எஸ்
- அசம்பண்ணா
- கரடங்கநல்லூர்
- ஆரம்பண்ணா
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
- சதகத்துல்லஹ் கல்லூரி
- அதிகாரி
- யுனுஸ் அகமது முகம்மது
- வேலியப்பன்
- தின மலர்
செய்துங்கநல்லூர், பிப். 28: ஆறாம்பண்ணையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் சதக்கத்துல்லா கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. தொடக்க விழாவில் திட்ட அலுவலர் யூனுஸ் அகமது முகமது ஷரீப் வரவேற்றார். பல்கலை. என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் முகாமை துவக்கி வைத்தார். எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், அப்துல்வகாப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கல்லூரி துறை தலைவர்கள் அப்துல்காதர், சித்தி ஜமீலா, செய்யது முகமது, சுல்தானா பர்வீன், செய்யது முகமது காஜா, அப்துல்கரீம், ஹாமில், ஹிமாலயா ஜலீலா பேகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் திமுக கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கிபாண்டியன், கருங்குளம் வட்டார காங். தலைவர் புங்கன், ஆறாம்பண்ணை பஞ். தலைவர் ஷேக்அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கமும், சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.
The post ஆறாம்பண்ணையில் என்எஸ்எஸ் முகாம் appeared first on Dinakaran.