×

சிவகாசியில் 3 இடங்களில் புதிய நிழற்குடை வேண்டும்: பயணிகள் கோரிக்கை

 

சிவகாசி, பிப்.28: சிவகாசி நகரில் 3 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசியில் நாளுக்கு நாள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருத்தங்கல்லில் இருந்து சிவகாசி காரனேசன் வழியாக திருவில்லிபுத்தூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தட பகுதியில் போதிய பயணிகள் நிழற் குடை இல்லாததால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் 3 இடங்களில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன் கூறும்போது, திருவில்லிபுத்தூரிலிருந்து திருத்தங்கல்லிற்கு காமராஜர் சிலை, ரயில்வே ஸ்டேசன் ரோடு, காரனேசன் பஸ் ஸ்டாப் வழியாக இரு மார்க்கமாக டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பகுதியில் காரனேசன் பஸ் ஸ்டாப், சிறுகுளம் கண்மாய் சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன் சாலை, சிவகாசி காமராஜர் சிலை அருகில் ஆகிய 3 இடங்களிலும் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயில் காலங்களிலும் மழை காலங்களிலும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பயணிகளின் நிலை அறிந்து புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து வரும் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தி பேசுவேன் என்றார்.

The post சிவகாசியில் 3 இடங்களில் புதிய நிழற்குடை வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Thirutangal ,
× RELATED சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை