×

காரியாபட்டியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி: பேரூராட்சி சேர்மன் தொடங்கி வைத்தார்

 

காரியாபட்டி, பிப்.28: காரியாபட்டியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் 2024ம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் பற்றி பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் மல்லாங்கிணறில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காரியாபட்டி பேரூர் கழகம் சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி துவங்கப்பட்டது. காரியாபட்டி நகர செயலாளரும், பேரூராட்சி தலைவருமான செந்தில் இல்லங்களுக்கு சென்று பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியன், தீபா, நாகஜோதி, ராமகிருஷ்ணன், முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் முத்து முனியாண்டி, பூமிநாத சேதுபதி, சங்கரேஸ்வரி, ஜீவா, சக்திவேல், பழனி, மாரியப்பன், பட்டாணி, ராஜகோபால் கருப்பையா, சாய்பாபா, அஜிஸ் சின்ன ராஜா, குருசாமி, சர்க்கரை, மணிமாற பூபதி, காதியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காரியாபட்டியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி: பேரூராட்சி சேர்மன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Kariyapatti ,Tamil Nadu ,Tamil Nadu Government ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...