×

செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

 

சிவகாசி, பிப்.28: செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சிவகாசி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் டூ செங்கோட்டை, தாம்பரம் டூ செங்கோட்டை அந்தியோதயா ரயில் விடும் திட்டம் அறிவித்து தற்போது நிறைவேற்றப்படாமல் உள்ளது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், தென்காசி விசுவநாதர் கோயில், குற்றாலநாதர் கோயில்களை இணைக்கும் இந்த ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ரயில் தாம்பரத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, சிவகாசி வழியாக காலை 7 மணிக்கு செங்கோட்டை சேரும் வகையிலும் மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து இரவு 7 மணிக்கு இதே வழித்தடத்தில் வந்து காலை 7 மணிக்கு தாம்பரம் சேரும் வகையிலும் இயக்க வேண்டும். தற்பொழுது வாரம் மூன்று நாட்கள் என்று இயங்கிக் கொண்டிருக்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சென்னை டூ கொல்லம் ரயிலை திருத்தங்கல் சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

வந்தே பாரத் ரயில் வசதி படைத்தவர்கள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் கட்டணம் உள்ளது. கார் வைத்திருக்கும் தொழிலதிபர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். ஏழை எளிய மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்யும் வகையில் ரயில் டிக்கெட்டை குறைக்க வேண்டும். அதேபோல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் வழித்தடத்தில் ஏழை பயணிகள் பயணம் செய்யும் வகையில் அந்தியோதயா ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Railway Passenger Association ,Sengottai ,Tambaram ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து