×

திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

திண்டுக்கல், பிப். 28: திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை விருதுகள் பெற பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: மீண்டும் மஞ்சப்பை பிரசசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (http://dindigul.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் அல்லது நிறுவன தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டினை கலெக்டரிடம் மே.1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாக நிறுவனத்தினர் மஞ்சப்பை விருதுகள் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,DINDUKAL DISTRICT ,BOUGODI ,Manjab ,Dindigul District ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...