×

போலீசார் மீது மண்ணை வாரி வீசிய 2 திருநங்கைகள் கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் கிரகப்பிரவேச விழா நடைபெற்றது. அப்போது, 2 திருநங்கைகள் அங்கு வந்து பணம் கேட்டு தக ராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அண்ணாநகர் காவலர்கள் அருண், அகஸ்டின் ஆகியோர், திருநங்கைகளிடம் விசாரித்தனர். இதனால், ஆத்திரமடைந்த 2 திருநங்கள், ஆபாசமாக பேசி 2 போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசாரின் மீது மண்ணை வாரி வீசினர்.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ரோஸி (44), சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த லல்லி (40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது (353), ஆபாசமாக பேசுவது (294), கொலை மிரட்டல் (506) ஆகிய 3 பிரிவின் கீழ், வழக்குபதிவு செய்து, இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலீசார் மீது மண்ணை வாரி வீசிய 2 திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Arun ,Augustine ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...