×

நகை திருடியவர் கைது

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயஞ்சேரி, மதுரை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்(42). இவர் தனியார் உணவக டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 14 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், தனசேகரன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் சென்னை, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த செல்வம் (எ) வெள்ளை செல்வம் (22) என்ற வாலிபரை நேற்று போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்ப்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட வாலிபரிடம் இருந்து 2 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kuduvancheri ,Thanasekaran ,Meenakshipuram ,Madurai, Iyancheri ,Urapakkam Panchayat, Chengalpattu District ,
× RELATED அமமுக கவுன்சிலர் வீட்டில்...