×

விசா மோசடி: பிரிட்டிஸ் ஏர்வேஸ் அதிகாரி இந்தியாவில் தலைமறைவு

லண்டன்: இங்கிலாந்தில் ஹீத்ரோ விமான நிலையத்தில் 5வது முனையத்தில் பணியாற்றியவர் 24வயது வாலிபர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு முறையான ஆவணங்கள் இன்றி பயணிப்பதற்கு அனுமதித்துள்ளார். ரூ.30கோடி இந்த விசா மோசடி வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 6ம் தேதி அவரை இங்கிலாந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவர் இந்தியா தப்பிச்சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமறைவாகி உள்ள வாலிபரை பிடிப்பது தொடர்பாக இந்திய காவல்துறையுடன் அந்நாட்டு போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

The post விசா மோசடி: பிரிட்டிஸ் ஏர்வேஸ் அதிகாரி இந்தியாவில் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : British Airways ,India ,London ,Terminal 5 ,Heathrow Airport ,England ,Dinakaran ,
× RELATED லண்டனில் இருந்து சென்னை வந்தபோது...