×

சுவையான கரும்பு சாறு பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்
நறுக்கிய பேரீச்சை – கால் கப்
முந்திரி – 25 கிராம்
பாசிப் பருப்பு – அரை கப்
கரும்புச் சாறு – 2 கப்
நெய் – சிறிதளவு
ஏலக்காய்த் தூள் – சிறிது போன்ற தேவையான பொருட்களை முதலில் நாம் எடுத்துக் கொள்வோம்.

செய்முறை:

வெறும் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள பச்சரிசியோடு சேர்த்து கழுவ வேண்டும். பின்னர் குக்கரில் இதனை இட்டு இரண்டு கப் கரும்பு சாறு மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும். கவனமாக மூன்று விசில்கள் வரும் வரை நன்றாக வேக வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷரானது போனதும் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கி நறுக்கி வைத்துள்ள பேரீச்சை, முந்திரி மற்றும் ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அதை பொங்கலில் இட்டுக் கிளறியப் பின்னர் அனைவரு க்கும் பரிமாறுங்கள். மேலும் கரும்புச்சாறே பொங்கலுக்கு தேவையான இனிப்பைத் தருவதால் இதற்கு சர்க்கரை தேவையில்லை.மேலும் தங்களுக்கு தேவைப் பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான கரும்பு சாறு பொங்கல் ரெடி.

The post சுவையான கரும்பு சாறு பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...