×

பாதயாத்திரையால் 40 எம்பிக்கள் கிடைப்பார்கள்: அண்ணாமலை நம்பிக்கை

திருப்பூர்: வேல் யாத்திரை 4 எம்எல்ஏக்களை கொடுத்தது. பாதயாத்திரை 40 எம்பிக்களை கொடுக்கும் என திருப்பூரில் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவிழா திருப்பூரில் இன்று காலை நடைபெற்றது. திருப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ரயில் நிலையம் அருகில் உள்ளகுமரன் நினைவு ஸ்தூபியில் முடித்துக் கொண்டார்.

இதை தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது: அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் தேர்தல் இது. ஆனால் அது 400 அல்லது அதற்கு மேலாக என்பது தான் கணக்கு. மோடி மக்களை சந்திக்கும் கூட்டம் இது. எனவே மக்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கு வர வேண்டும். வேல் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது. இந்த பாதயாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க போகிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

 

The post பாதயாத்திரையால் 40 எம்பிக்கள் கிடைப்பார்கள்: அண்ணாமலை நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Padayatra ,Annamalai ,Tirupur ,Vel Yatra ,Tamil ,Nadu ,BJP ,President ,Tamil Nadu ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...