சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர் . இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் பேசியதாவது,
மிக விரைவில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு: செல்வப்பெருந்தகை
திமுக – காங்கிரஸ் இடையே மிக விரைவில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தகவல் தெரிவித்துள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனான சந்திப்பின்போது தொகுதிகள் இறுதியாகும். இன்று மாலை 6 மணிக்கு மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துப் பேசுவதாகவும் கூறினார்.
The post திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.