×

மது போதையால் விபரீதம்; 2வது மாடியில் இருந்து விழுந்த பெயின்டர் பலி

பெரம்பூர்: அயனாவரம் பி.ஏ.கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (38), பெயின்டர். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, பவானி என்பவருடன் திருமணமாகி, 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மது போதைக்கு அடிமையான விஜயகுமார் நேற்று முன்தினம் காலை முதலே வீட்டில் மது குடித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு போதையில் இருந்த அவர், தனது வீட்டின் 2வது தளத்திற்கு மேல் உள்ள மொட்டை மாடிக்கு சென்றபோது, திடீரென கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி பவானி மற்றும் அக்கம்பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு விஜயகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மது போதையால் விபரீதம்; 2வது மாடியில் இருந்து விழுந்த பெயின்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vijayakumar ,BA Temple Street, Ayanavaram ,Bhavani ,Bali ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு