×

அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜுவுக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு மாவட்ட செயலாளர் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கூவத்தூர் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாகவும், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகவும் தெரிவித்திருந்த முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு எதிராக, சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென்று ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ள நிலையில், அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்த ஏ.வி.ராஜூ இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு என்று பிரத்யேகமாக பெண்கள் ஆதரவு இருந்தது. ராஜூவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளது. ராஜூவின் இந்த பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். ராஜூவின் பேச்சை நீக்க வேண்டுமென கூகுள் மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜுவுக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு மாவட்ட செயலாளர் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : District Secretary ,AIADMK ,Raju ,Madras High Court ,CHENNAI ,Salem district ,Venkatachalam ,Chennai High Court ,AV ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு