×

டிவைடரை தாண்டி விழுந்த கார் கன்டெய்னர் மீது மோதி 9 பேர் பலி: பீகாரில் சோகம்

கைமூர்: பீகாரில் கன்டெய்னர் மீது கார் மோதிய பயங்கர விபத்தில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் சசரத்தில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், மொஹானியா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த பைக் மீது மோதியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே இருந்த ெநடுஞ்சாலையின் டிவைடர் மீது மோதி எதிர்திசையில் குப்புற கவிழ்ந்தது. அந்த சமயத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்ததால், கார் மீது மீண்டும் விபத்துக்குள்ளானது. தகவலறிந்த போலீசார், விபத்தில் பலியானவர்களை மீட்டனர்.

இதுகுறித்து மொஹானியா சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி திலீப் குமார் கூறுகையில், ‘மொஹானியாவில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த கார், அவ்வழியாக சென்ற பைக் மீது மோத முயன்றது.
அப்போது பைக் ஓட்டுநரை காப்பாற்ற வேண்டி, கார் தாறுமாறாக சென்றது. அதன் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற கன்டெய்னர் மீது மோதி விபத்துக்குள்ளானது. காருக்குள் இருந்த 9 பேரும் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பாபுவா சதார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். விபத்து குறித்து ெதாடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

* உ.பி-யில் 6 தொழிலாளர்கள் பலி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ஜான்பூர் நோக்கி சென்ற டிராக்டரில் 12 தொழிலாளர்கள் தங்களது பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சமத்கஞ்ச் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

The post டிவைடரை தாண்டி விழுந்த கார் கன்டெய்னர் மீது மோதி 9 பேர் பலி: பீகாரில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Kaimur ,Varanasi ,Sasaram ,Kaimur district ,Mohania ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...