×

போதையில் மட்டையான 2 இளம்பெண்கள்: மருத்துவமனையில் சேர்த்த மக்கள்

புனே: புனேயில் இரண்டு இளம்பெண்கள் போதையில் மட்டையான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த கொத்ருட் பகுதியில் இரண்டு இளம்பெண்கள், மதுபோதையில் கிடக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பொதுமக்கள் சிலர் போதையில் மட்டையாகி கிடந்த இரண்டு பெண்களின் முகத்திலும் தண்ணீரை ஊற்றி எழுப்ப முயன்றனர்.

அதன் பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு அப்பகுதியில் இருந்த மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து புனே பல்கலைக்கழங்களில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறுகின்றனர்.

The post போதையில் மட்டையான 2 இளம்பெண்கள்: மருத்துவமனையில் சேர்த்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Pune ,Kothrut ,Maharashtra ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...