×

சென்னை கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: சென்னை கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடித்து உள்ளனர். திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் வரதராஜன் நகர் சோழன் தெருவை சேர்ந்தவர் அமேதாடான் போஸ்கோ(59). இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றுகின்றார். இவரது மனைவி சந்தானலட்சுமி (55). இவர் மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக கண்காணிப்பாளராக உள்ளார்.

இந்தநிலையில் சந்தான லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டிக் கொண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அன்றைய தினம் மாலை மருத்துவ சிகிச்சை முடித்து வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன்பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சென்று சிசிடிவி கேமராவை பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி கீர்த்திகா (28) இவர் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு அருகில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post சென்னை கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chennai ,collector ,Thiruvallur ,Amethadan Bosco ,Cholan Street, Varadarajan Nagar ,Adi Dravidar ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...