×

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர்..!!

புதுக்கோட்டை: முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை கணினி ஆபரேட்டர் நூதனமாக திருடியுள்ளார். தகுதியான முதியோர்களுக்கு உதவித்தொகை செல்வதில் ஏதேனும் குளறுபடி உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில் மட்டும் இறப்பே இல்லாமல் ஒரே அளவில் முதியோர் உதவித் தொகை வழங்கப்படுவதை கண்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஒரே வங்கி கணக்கிற்கு ஒரே வருடத்தில் ரூ.27 லட்சம் சென்றிருப்பது அம்பலமாகியது.

The post முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர்..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...