×

பாலாற்றில் ஆந்திரா அணை கட்ட தடையாணை பெறுக: வைகோ வலியுறுத்தல்

சென்னை: பாலாற்றில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தடையானை பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கி.மீ. பாய்கிறது. ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. பாய்ந்து தமிழ்நாட்டில் வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் நுழைகிறது. இந்நிலையில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post பாலாற்றில் ஆந்திரா அணை கட்ட தடையாணை பெறுக: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Chennai ,Madhyamik General Secretary ,Tamil Nadu government ,Supreme Court ,Andhra government ,Bala ,Palaru ,Nandidurgam hills ,Chikbellapur district ,Karnataka, Karnataka ,Andhra ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில்...