×

சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி போக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: துரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட இரண்டு மாதங்களாக வழங்க முடியாத நிலை உள்ளது. போராட்டம் நடைபெற்று வருவதால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சென்னை பல்கலைக்கழகத்திற்கு தரவேண்டிய 51 விழுக்காடு நிதியில், 20 விழுக்காட்டிற்கும் குறைவான நிதியை மட்டும் அரசு விடுவித்துள்ள நிலையில், பிப்ரவரி மாத சம்பளமே கொடுக்க முடியாத சூழ்நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. னவே, சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறை போக்கிடும் வகையில், உரிய நிதியையும், மானியத்தையும் உடனடியாக வழங்கி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பளம் பெறவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தை பெறவும், மாணவர்கள் பாதிப்பிலிருந்து விடுபடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

The post சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி போக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,Madurai ,O. Panneerselvam ,Kamarasar Universities ,Durai Kamarasar University ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...