×

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது

டெல்லி: டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தேங்காய் பவுடர் என்ற பெயரில் ரூ.2,000 கோடி போதைப்பொருளை கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு கடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை தேடி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tamils ,Delhi ,Dinakaran ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!