×

சாலை அமைத்துத் தர கோரிக்கை சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு அரசு மதுபான கடை அருகே கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பதாக ஒரத்தநாடு ஏஎஸ்பி சானாஸிற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தெற்கு கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகையன் (55), பத்து தாக்கு கிராமத்தை சேர்ந்த சுதாகர் (35) ஆகியோர் மது விற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து 81 மது பாட்டில்கள், ரூ.5000 ஐ பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சாலை அமைத்துத் தர கோரிக்கை சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,ASP ,Chanas ,Vettikadu ,Dinakaran ,
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...