- மேகதாட்டு அணை
- வேதாரண்யம்
- தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
- தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர்
- பார்த்தசாரதி
- காவிரி மேலாண்மை ஆணையம்
- காவேரி நதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
வேதாரண்யம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கடந்த 1ம்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் 2018-ல் அளித்த தீர்ப்பின்படி அமைத்துள்ள, காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகம் – தமிழ்நாடு – கேரளம் – புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்குக் காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பதற்கான அதிகாரம் மட்டுமே கொண்டது.
The post மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் appeared first on Dinakaran.