×

பரசலூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாமில் தீர்வு காண கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காளகஸ்தினாதபுரம் ஊராட்சியில் வரும் 28ந் தேதி புதன்கிழமை காலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் சமூக பாதுகாப்பு நலத்துறை, வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு காண உள்ளனர். அந்த வகையில் காளகஸ்தினாதபுரம், பரசலூர், கீழ்மாத்தூர், இளையாளூர் ஆகிய 4 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்து மனுநீதி நாள் முகாம் அன்று தீர்வு காணும் வகையில் பொதுமக்களிடம்

The post பரசலூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாமில் தீர்வு காண கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Manunidhinal ,Parasalur panchayat ,Sembanarkoil ,Mayiladuthurai District ,Kalakastinadhapuram ,Collector ,Mahabharathi ,Social Security and Welfare Department ,District Distribution Department ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை