×

புதுக்கடை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

புதுக்கடை, பிப்.25: புதுக்கடை அருகே வேங்கோடு பகுதி வெள்ளரிதரிசு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் கனகராஜ் (61). கூலித் தொழிலாளியான இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த அவர் சம்பவ தினம் வீட்டில் வாழை பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி கனகராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக கனகராஜ் மனைவி சாந்தா மேரி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கடை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pudukada ,Pudukadai ,Kanagaraj ,Vellaritarisu Udlo, Venkodu ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு