- வடக்கு கல்மத்
- குளத்தூர்
- அமைச்சர்
- கீதாஜீவன்
- சட்டமன்ற உறுப்பினர்
- Markandeyan
- வடக்கு கல்மேடு
- வெபல்லோடா
- உரத்சீ
- ஓட்டாபிதரம் உராதச்சி
- யூனியன்
- தின மலர்
குளத்தூர், பிப். 25: குளத்தூர் அருகே வடக்கு கல்மேட்டில் ரூ.1.46 கோடியில் கண்மாய் சீரமைப்பு பணிகளை அமைச்சர் கீதாஜீவன், எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கிவைத்தனர். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு கல்மேடு கண்மாயை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ1.46கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.
கோரம்பள்ளம் வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் பாலமுருகன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் செல்வக்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கோவில்பட்டி கிழக்கு நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு அன்புராஜன், ஓட்டப்பிடாரம் கிழக்கு காசிவிஸ்வநாதன், தூத்துக்குடி வடக்குமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும்வென்றான் ஊராட்சி தலைவர் முத்துக்குமார், குதிரைகுளம் சண்முகையா, ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, மாவட்டபிரதிநிதி தளவைராஜா, நெசவாளர் அணி அமைப்பாளர் நடராஜன், ஆதிதிராவிடர் நல அணி துணைஅமைப்பாளர் முத்துராஜ், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கச்சாமி, கிளைசெயலாளர்கள் மாரியப்பன், முத்துராஜ், கனகராஜ், செல்வக்குமார், லிங்கராஜ், லட்சுமணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் ஆகியோர் உடனிருந்தனர்.
The post குளத்தூர் அருகே வடக்கு கல்மேட்டில் ரூ.1.46 கோடியில் கண்மாய் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.