×

மூதாட்டி மாயம்

கிருஷ்ணகிரி, பிப்.25: ராயக்கோட்டை அருகேயுள்ள சஞ்சல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(75). இவரது கணவர் முனியப்பன் இறந்து விட்டதால், தனியாக வசித்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, வீட்டில் இருந்து கோவிந்தம்மாள் வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி நேற்று அவரது மகள் கோபி அளித்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவிந்தம்மாளை தேடி வருகின்றனர்.

The post மூதாட்டி மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Govindhammal ,Sanchalpatti ,Rayakottai ,Muniappan ,Moothati Mayam ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு