×

கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் 9வது மாடியில் இருந்து கீழே குதித்து மனைவி தற்கொலை

பெரம்பூர்: பெரம்பூர் கவுதமபுரத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சி- பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் சாந்தகுமார் (51). வேன் டிரைவரான இவர், கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளது, என தனது மனைவி கவிதாவிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக கவிதா தனது மகன்களின் உதவியுடன் அருகில் இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே வலி அதிகமாகி சாந்தகுமார் மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சாந்தகுமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கவிதா கதறி அழுதார். இந்நிலையில், இறந்து போன சாந்தகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது 9வது மாடியில் நின்று கொண்டிருந்த அவரது மனைவி கவிதா திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்பியம் போலீசார், கவிதா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை கவிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவன், மனைவி இருவரது உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த கவிதாவிற்கு 20 வயதில் சூர்யா என்ற மகனும், 17 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.

The post கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் 9வது மாடியில் இருந்து கீழே குதித்து மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Shanthakumar ,C-Block ,Urban Habitat Development Board ,Gauthampuram, Perambur ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு