×

மணிப்பூரில் குண்டு வெடித்து ஒருவர் பலி: பள்ளிக்கு தீ வைப்பு

இம்பால்: மணிப்பூரில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இரு சமூகத்தினரிடையே வெடித்த இனமோதல் முடிவுக்கு வந்தாலும், அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் அரங்கேறி வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் தொடர் கதையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு மேற்கு இம்பால் மாவட்டம் டிஎம் கல்லூரி வளாகம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இருவர் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ஒய்னம் கெனகே(24) என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் மற்றொருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

லம்பேல்பட் என்ற இடத்தில் ஐக்கிய கமிட்டி மணிப்பூர் என்ற அமைப்பின் அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதேபோல் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் பள்ளி ஒன்றை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனமும் தீயில் எரிந்து சாம்பலானது.

The post மணிப்பூரில் குண்டு வெடித்து ஒருவர் பலி: பள்ளிக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...