×

திருக்கடையூரில் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்

தரங்கம்பாடி: திருக்கடையூரில் 50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், டிமணல்மேடு, பிள்ளைபெருமாநல்லுர், மற்றும் சுற்றுபுற கிராமங்களில் இருந்து 2000 பேர் இந்த நூலகத்தில் வாசகராக உள்ளனர். இங்கு வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வரலாறு, கட்டுரை, ஆன்மீகம், சமையல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 27,503 நூல்கள் உள்ளன. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் தினசரி மற்றும் வார இதழ்களை படிக்க வருகின்றனர். நூலகத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், 50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் இந்த நூலகத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு சார்பில் 4658 நூலகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகங்களில் 828 நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அந்த 828 நூலகங்களில் திருக்கடையூர் நூலகமும் இடம் பெறுமா என்ற எதிர்பார்பில் வாசகர்கள் உள்ளனர்.

The post திருக்கடையூரில் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thirukkadaiyur ,Tharangambadi ,Mayiladuthurai district ,Timanalmedu ,Pillaiperumanallur ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது