×

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு விவகாரம்

சென்னை: வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கில் ஐகோர்ட் வரும் திங்கட்கிழமை காலை தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 13ம் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளார்.

The post அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Minister ,High Court ,Peryasami ,Authority ,Chennai ,ICourt ,Housing Facility Board House ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...