×

மானூர் அருகே பெண்ணை தாக்கியவர் கைது

மானூர்,பிப்.24:மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் அந்திரம் (50). இவருக்கும், அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் மாரியப்பன் (49) என்பவருக்கும் பாதை பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாதையை முள்வேலி போட்டு மாரியப்பன் அடைத்துள்ளார். இதனை அந்திரம் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் அவரை தாக்கினார். இதனை தடுக்க வந்த அந்திரத்தின் மகள் சந்திரகனி (23) என்பவரையும் தாக்கினார். இது குறித்து மானூர் போலீசில் சந்திரகனி கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ ரமினா மரியம் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார்.

The post மானூர் அருகே பெண்ணை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Manoor ,Manur ,Andhram ,Melapillayarkulam ,Mariappan ,
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்