×

பல கோடி தங்கக்கட்டிகள் கடலில் வீச்சு

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை கடலோரப் பகுதியில் இலங்கையில் இருந்து பல கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மண்டபம் கடலோர காவல்படையினருடன் இணைந்து வேதாளை தெற்கு கடலோரப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வேதாளை கடலோரப் பகுதியில் வந்த ஒரு நாட்டுப்படகை சந்தேகத்தின் பேரில் சுற்றி வளைத்தனர். அந்தப் படகில் 3 பேர் இருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அருகே சென்றபோது படகில் இருந்தவர்கள் பார்சல்களில் வைத்திருந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசி விட்டு படகிலிருந்து குதித்து தப்பிச் சென்றனர். பின்னர் படகை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், கடலில் வீசப்பட்ட தங்ககட்டி பார்சல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தப்பிய 2 பேர், நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

The post பல கோடி தங்கக்கட்டிகள் கடலில் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Central Revenue Intelligence ,Sri Lanka ,Ramanathapuram district ,Coast Guard ,Vedalai South ,
× RELATED கம்போடியாவில் இருந்து சென்னைக்கு...