சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பிய நிலையில் அதன் மீது பின்னால் வந்த மேயர் பிரியாவின் கார் மோதியது. விபத்து காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேயர் பிரியா சென்ற கார் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் காயமின்றி தப்பினார். ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார்.
The post சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து! appeared first on Dinakaran.