×

மேம்பால கட்டுமான பணிக்கு தடை விதிக்க கோரிய மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

மதுரை: மதுரை வண்டியூர், தென்கால் கண்மாயில் ரூ.350 கோடியில் கட்டப்படும் மேம்பால கட்டுமான பணிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் அரசு தரப்பு, மனுதாரர் தரப்பு விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. மேம்பால பணிகளால் வண்டியூர், தென்கால் கண்மாய் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post மேம்பால கட்டுமான பணிக்கு தடை விதிக்க கோரிய மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...