×

விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, அரசு சார்பில் ஊக்கத்தொகையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்; தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் நம் வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம்.

அந்த வகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலானப் போட்டிகளில் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித் தந்த, 609 வீரர் – வீராங்கனையர் – மாற்றுத்திறனுடைய வீரர் – வீராங்கனையருக்கு கழக அரசு சார்பில் ரூ.16.24 கோடியை உயரிய ஊக்கத் தொகையாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இன்று வழங்கினோம்.

மேலும், பல்வேறு போட்டிகளில் சாதனைகளைப் படைத்து வரும் வீரர் – வீராங்கனையர் 4 பேருக்கு விளையாட்டு வீரர்களுக்கான 3 % இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம். ‘நீண்ட தூரம் ஓடினால் தான், அதிக உயரம் தாண்ட முடியும்’ என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாக்குப்படி, நம் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் – வீராங்கனையர் நீண்ட தூரம் ஓடவும் – அதிக உயரம் தாண்டவும், நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, அரசு சார்பில் ஊக்கத்தொகையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...