×

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்

சேலம், பிப்.23: சேலத்தை அடுத்துள்ள காரிப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது கொண்ட மாற்றுத்திறனாளி பெண், தனது வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு தந்தையின் நண்பரான அனுப்பூர் பகுதியை சேர்ந்த நேரு என்பவர் அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். அவர், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுபற்றி தனது பெற்றோரிடம் அப்பெண் கூறியுள்ளார். உடனே பெற்றோர், சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, நேரு மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Garipatti ,Nehru ,Paddur ,Dinakaran ,
× RELATED அயோத்தியாப்பட்டணத்தில் மிதமான மழை