×

மதுரையில் தொழிலதிபரை தாக்கியவர்களுக்கு வலை

மதுரை, பிப். 23: மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் கணேஷ் பாலாஜி (40). வீடு காலி செய்து தரும் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அய்யர்பங்களாவில் வீடு காலி செய்வதற்காக தனது நண்பர்களான சதாம்உசேன், சரவணக்குமார் ஆகியோருடன் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எல்லீஸ் நகர் கென்னட் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே சென்ற போது கணேஷ் பாலாஜிக்கு தெரிந்த வைத்தியநாதபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (19), சக்தி கவுதம் (23), மனீஷ்குமார் (19), கவுதம் ஆகியோர் வாகனத்தை மறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அதை தட்டிகேட்ட கணேஷ் பாலாஜியை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து கணேஷ் பாலாஜி அளித்த புகாரில் எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிந்து தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

The post மதுரையில் தொழிலதிபரை தாக்கியவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai, Pip ,Ganesh Balaji ,Ellies, Madurai ,Bakers and Movers ,Ayurbhangala ,Sadamhusen ,
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது