×

வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி

 

கரூர், பிப். 23: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உயர் ரத்த நோயால் அவதிப்பட்டு வந்த பெண் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சாத் பேகம்(65). கடந்த சில மாதங்களாக உயர் ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17ம்தேதி அன்று சாலையோரம் நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Wangal ,Karur ,Karur district ,Athur ,Wangal, Karur district ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...