×

அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட ஒரு லட்சம் ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நிலங்கள் அதிகரிப்பு: ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: இந்த நிதிநிலை அறிக்கைகள் மூலம் ஒரு கோடியே 4 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு அரசின் திட்டம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் தான் விவசாயிகள் எந்தவித போராட்டமும் இல்லாமல் வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நெல் விலையை சன்னரகத்திற்கு 70 ரூபாயிலிருந்து 107 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டாரக நெல்லுக்கு 50 ரூபாயிலிருந்து 82 ரூபாயாக ஒரு குவிண்டாலுக்கு இங்கே வழங்கப்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டு காலம் இருக்கிறது. கரும்பு விலையைப் பொறுத்தவரை கடந்த அதிமுகவின் 10 ஆண்டுக் கால ஆட்சியில் கரும்பு ஆலை முடக்கப்பட்டு, கரும்பு விலை ஏற்றப்படாமல் இருந்து.

அப்போது 95,000 ஹெக்டேர் நிலத்தில் தான் கரும்பு பயிர் செய்தார்கள். முதல்வர் எடுத்த நடவடிக்கையால் இப்போது ஒன்றரை லட்சம் ஹெக்டேர் அளவுக்கு கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது தான் ஒன்றிய பாஜ ஆட்சியில் அடுத்த அக்டோபரில் கரும்பு விலை உயர்வு வருகிறதாம். 25 ரூபாய் ஒரு டன்னுக்கு கூடுதலாக்கி, அக்டோபர் மாதம் வரும் கரும்பு வெட்டுவதற்கு அறிவிக்கிறார்கள். ஆனால், முதல்வர் இந்த நிதிநிலை அறிக்கையிலே 25 ரூபாய் கூடுதலாக வழங்கியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் 2020-21வரை, சாகுபடி பரப்பு 61.56 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு காலத்தில், 62.60 லட்சம் ஹெக்டர் அளவுக்கு, கடந்த ஆட்சியை விட ஒரு லட்சம் ஹெக்டர் அளவுக்கு சாகுபடி நிலங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷனில் தேங்காய் எண்ணெய் கொடுத்தால், அந்த விவசாயம் செய்கின்ற மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கும் என்பதால் அந்தத் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட ஒரு லட்சம் ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி நிலங்கள் அதிகரிப்பு: ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,MRK Panneerselvam ,Chennai ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...