×

அரூர் அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பயணியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு

அரூர்: அரூர் அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பயணியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு ஆகியோர் மீது அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரூரில் இருந்து ஒசூர் சென்ற அரசு பேருந்தில் பாஞ்சாலை என்ற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச் சென்றுள்ளார். பேருந்தில் மாட்டிறைச்சியை எடுத்து வரக்கூடாது என தரக்குறைவாக பேசி மூதாட்டியை நடத்துநர் இறக்கிவிட்டதாக புகார் தெரிவிக்கபட்டது.

The post அரூர் அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பயணியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,Aroor police ,Sasikumar ,Raghu ,Panjalai ,Hosur ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி