×

மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம். செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று (21.2.2024) மாலை TN-32-N-3938 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (வயது 16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வன் வீனேஷ் (வயது த/பெ.ஜெயராஜு என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். 16) இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்துமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Malsevoor ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Malsevur ,K. ,Stalin ,Viluppuram District ,Senji Circle ,Amman ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...