×

மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

காரைக்கால்,பிப்.22: கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறியதாவது: காரைக்கால் மாவட்டத்தில் மாதந்தோறும் பொது மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மூன்று மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போகிறது. எனவே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊக்கத் தொகைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே புதிய ஆட்சியர் விவசாயிகள் பயன்பெற ஏதுவாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார்.

The post மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Suresh ,President ,Kadamati Farmers' Association ,Dinakaran ,
× RELATED மூதாட்டியை தாக்கி 50 பவுன் நகைகள் கொள்ளை