- உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
- திருவாரூர்
- கலெக்டர்
- சாரு
- தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம்
- திருவாரூர் மாவட்ட சேகரிப்பாளர் அலுவலகம்
- திருவாரூர் மாவட்டம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள், நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post திருவாரூரில் பிப்.27ல் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா appeared first on Dinakaran.