×

விவசாயிகள் மகிழ்ச்சி கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பவானிசாகர் போலீசார் நேற்று முன் தினம் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட சி.ஆர். கேம்ப், கோழிப்பண்ணை அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை பிடித்து விசாரித்து, சோதனையிட்டதில் அவர்களது சட்டை பாக்கெட்டில் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர்கள் இருவரும் சி.ஆர்.கேம்ப்பை சேர்ந்த கிருபாகரன் (31), கவியரசு (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள், 2 பிளாஸ்டிக் கவர்களில் வைத்திருந்த 10 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post விவசாயிகள் மகிழ்ச்சி கஞ்சா வைத்திருந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Bhavanisagar ,C. ,R. Camp ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...