×

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

சிவகாசி: சிவகாசி அருகே முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மனைவி பாண்டியம்மாள் (31). கடந்த சில நாட்களுக்கு முன்ப கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று ஆனந்தராஜ், தாய் சாந்தி, தம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாண்டியம்மாள் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர். அப்போது பாண்டியம்மாளை தாக்கி அவரது கையில் இருந்த 21 நாள் பெண் குழந்தையை பிடுங்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதில் குழந்தை கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பாண்டியம்மாளும் அவரது பெண் குழந்தையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியை தாக்கிய கணவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Anandaraj ,Pandiammal ,Muthuramalingapuram ,Shanti ,Gopalakrishnan ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை