- சீக்கியர்கள்
- பாஜக
- கொல்கத்தா
- சந்தேஷ்காலி தீவு
- வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஷாஜஹான் ஷேக்
- சுவேந்து அதிகாரி சந்தேஷ்காலி
- கலிஸ்தானி
கொல்கத்தா: மேற்கு மாநிலத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். அங்கு பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி சந்தேஷ்காலி பகுதிக்கு வருவதை தடுக்கும் பணியில் சீக்கியரான ஐபிஎஸ் அதிகாரி ஜஸ்பிரீத் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை காலிஸ்தானி என்று பா.ஜவினர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுவேந்து அதிகாரியையும் பாஜ கட்சியையும் கண்டித்து 200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்கத்தாவில் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
The post காலிஸ்தானி’ என திட்டிய விவகாரம் பாஜ கட்சியை கண்டித்து சீக்கியர்கள் போராட்டம்: கொல்கத்தாவில் பரபரப்பு appeared first on Dinakaran.